பொங்கல் பண்டிகை: மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிந்துள்ள மண்பானைகள்!!

Read Time:1 Minute, 36 Second

593ebfa1-5156-491b-8ac6-59aa708b2f6e_S_secvpfதமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 6 நாட்களே உள்ளன.

பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்பே ஈரோடு நகரில் கொல்லம் பாளையம் நாடார் மேடு சாஸ்திரி நகர், வீரப்பன்சத்திரம், கருங்கல் பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் கரும்புகள் விற்பனைக்கு வந்து விட்டன.

பொதுமக்கள் கரும்புகளை வாங்கி கொண்டு செல்கிறார்கள்.

பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் வைக்க கிராம புறங்கள் முழுவதும் மண்பானையில் தான் வைப்பார்கள். அதில் வர்ணம் தீட்டி வைப்பார்கள்.

ஈரோட்டிலும் நகர பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வீடு முன்பும் வெளியே வாசலிலும் மண்பானையில் பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.

இதையொட்டி ஈரோடு மார்க்கெட் மற்றும் பல்வேறு கடைகளில் மண்பானைகள் விற்பனைக்கு வந்து குவிந்து உள்ளது. பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் வந்து மண்பானைகளை வாங்கி கொண்டு செல்கிறார்கள்.

இன்னும் ஒரிரு நாட்களில் கரும்பு மற்றும் பொங்கல் பானைகள், மஞ்சள் குலைகள் விற்பனை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லிங்கா பிரச்சினையில் தலையிட ரஜினிக்கு கோரிக்கை!!
Next post 10-ம் வகுப்பு மாணவியை ஓட்டலில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த கும்பல்!!