போபாலில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்களை வாளேந்தி விரட்டிய கல்லூரி மாணவி!!

Read Time:2 Minute, 12 Second

73f6f262-4571-4765-8880-dc0b0bbcd966_S_secvpfமத்திய பிரதேச தலைநகர் போபாலில், வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்களை கல்லூரி மாணவி வாளேந்தி துணிச்சலுடன் விரட்டிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

என்ஜினீயரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி சரன்பிரீத் கவுர் (21), நேற்று அதிகாலை தனது வீட்டின் இரண்டாவது மாடியில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது, யாரோ மர்ம நபர்கள் மெதுவாக பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டது. வீட்டின் முதல் மாடியில் அனைவரும் தூங்கிக்கொண்டிருக்கும்போது, இந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்பதை அறிவதற்காக மெதுவாக சத்தம் வந்த இடத்தை நோக்கி சென்று பார்த்தார்.

அப்போது, அங்கு முகமூடி அணிந்த 5 நபர்கள் வீட்டில் பதுங்கியிருந்தது தெரிந்தது. சற்றும் தாமதிக்காமல் வீட்டில் வைத்திருந்த 4 அடி நீள சீக்கிய பாரம்பரிய வாளை கையில் எடுத்த சரன்பிரீத், ஆவேசமாக கத்திக்கொண்டு கொள்ளையர்களை நோக்கி பாய்ந்தார். இதனால், உயிர் பிழைத்தால் போதும் என்று நினைத்த கொள்ளையர்கள் தலைதெறிக்க அங்கிருந்து ஓடிவிட்டனர்.

கொள்ளையர்களை துணிச்சலுடன் விரட்டியடித்தது பற்றி கேள்விப்பட்ட மாநில உள்துறை மந்திரி பாபுலால் கவுர், இன்று சரன்பிரீத் கவுரின் வீட்டிற்குச் சென்று அவரது துணிச்சலை பாராட்டினார். மேலும், வீரதீர செயல்களுக்கான விருது வழங்க அவரது பெயரை பரிந்துரை செய்வதாகவும் மந்திரி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்ணுக்காக பிரார்த்தனை செய்யும் பிரதமர்: காரணம் என்ன? (வீடியோ இணைப்பு)!!
Next post டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த பாதுகாப்பு படை வீரர்!!