டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த பாதுகாப்பு படை வீரர்!!
டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாதுகாப்பு படை வீரர் முகேஷ் குமார் (40) என்பவர் நேற்று இரவு ஏர்போர்ட் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். வேலை முடிந்ததும் தனதுடன் வேலைப்பார்க்கும் சக போலீசாருடன் தங்கும் இடத்திற்கு இன்று அதிகாலை 3 மணியளவில் திரும்பினார். அப்போது முகேஷ் தன்னுடைய ஏ.கே.45 ரைபிள் மூலம் தலையில் சுடுவதற்கு தயாரானார். ஆனால், அவருடன் இருந்த சக ஊழியர்கள் அதை தடுக்க முயற்சிப்பதற்குள் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்.
உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உயர்அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டனர். தற்கொலை செய்து கொண்ட முகேஷுக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
Average Rating