சிகரெட்டால் சூடு வைத்து 2 சிறுமிகளை பலாத்காரம் செய்த வாலிபர் கைது!!

Read Time:1 Minute, 37 Second

de1dbf55-9e28-42cd-8eec-566873d7429c_S_secvpfராமநாதபுரத்தை அடுத்துள்ள உத்தரகோசமங்கை அருகே உள்ளது நல்லிருக்கை. இந்த ஊரை சேர்ந்த 4 வயது மற்றும் 8 வயது பள்ளி சிறுமிகள் நேற்று முன்தினம் பள்ளியில் இருந்து வெளியில் வந்துள்ளனர்.

அப்போது அவர்கள் இருவரையும் அதே பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் வீரா என்ற முத்துராமலிங்கம் என்பவர் நைசாக பேசி ஒதுக்குப்புறமாக அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது சிறுமிகள் இருவரும் சத்தம்போடவே சிகரெட்டால் சூடு வைத்துள்ளார்.

இதன்பின் சிறுமிகள் இருவரும் வீட்டிற்கு சென்றுவிட்டனர். குளிக்க சென்றபோது தீயால் சுடப்பட்டிருந்ததை பார்த்த சிறுமியின் தாய் இதுகுறித்து கேட்டபோது வாலிபரின் வக்கிர செயல் தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் தாய் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து உத்தரகோசமங்கை போலீசார் அங்கு சென்று வாலிபர் வீரா என்ற முத்துராமலிங்கத்தை கைது செய்தனர். இதுதொடர்பாக கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசங்கர் விசாரணை செய்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாகரீக சென்னையில் சேலையில் வலம் வரும் கல்லூரி மாணவிகள்!!
Next post கோவையில் உடலுக்குள் ஆவியை செலுத்தியதாக மந்திரவாதிகள் மீது வாலிபர் புகார்!!