கற்பழிப்பு முயற்சி கைகூடாதாததால் பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிய மைத்துனர் தலைமறைவு!!

Read Time:1 Minute, 34 Second

f84507f2-104d-46c4-a60d-4a164fa2e900_S_secvpfஉத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர் தனது முயற்சி கைகூடாததால் சகோதரரின் மனைவி என்றும் பாராமல் அவரது முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்குள்ள சபார் பகுதியை சேர்ந்த அந்த பெண் தனது கணவரின் சகோதரரான ஜஹாங்கிர் என்பவருடன் சொந்த கிராமமான குடா நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தார். வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய ஜஹாங்கிர், சகோதரரின் மனைவி என்றும் பாராமல் அந்த பெண்ணை கற்பழிக்க முயன்றார்.

அவரது ஆசைக்கு இணங்க மறுத்த அந்தப்பெண் கூச்சலிட்டு போராடினார். இதனால், வெறுப்படைந்த ஜஹாங்கிர் அவரது முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு தப்பியோடி விட்டார். இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சந்திரசேகர ராவ் மகளுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி: ஆஸ்பத்திரியில் அனுமதி!!
Next post டார்ச் லைட் வெளிச்சத்தில் வரிசையாக நடந்த கருத்தடை அறுவை சிகிச்சைகள்!!