வேடசந்தூர் அருகே பெண்ணை அடித்து கொன்று கிணற்றில் வீச்சு!!
வேடசந்தூர் அருகே உள்ள வைரக்கவண்டனூரை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது37). இவரது மனைவி ஜோதிமணி (31). இவர்களுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். குடும்பத்தில் கணவன்–மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜோதிமணி வீட்டு அருகே உள்ள கிணற்றில் நேற்று மாலை பிணமாக கிடந்தார்.
கணவனுடன் ஏற்பட்ட சண்டையில் ஜோதிமணி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் இதனை அவரது தாயார் சரஸ்வதி மறுத்துள்ளார். எனது மகள் தற்கொலை செய்ய வில்லை. அவளை அடித்து கொன்று கிணற்றில் வீசி விட்டார்கள்.
இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேடசந்தூர் போலீசில் புகார் செய்துள்ளார்.
போலீசார் ஜோதிமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்று பரிசோதனை நடக்கிறது. அதில் ஜோதிமணி எப்படி இறந்தார் என்பது தெரிய வரும். போலீசர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating