ஒற்றை பிள்ளைக்கு வழியில்லாதவர் இந்துப் பெண்கள் 4 பிள்ளைகளை பெற வேண்டும் என்பதா?: அசம் கான் கிண்டல்!!

Read Time:2 Minute, 9 Second

7a001a2d-99cb-401f-b1b3-3639969d21d2_S_secvpfஇந்துப் பெண்கள் 4 பிள்ளைகளை பெற வேண்டும் என்று அறிவரை கூறிய பா.ஜ.க. எம்.பி. சாக்‌ஷி மஹராஜுக்கு பதிலடி தரும் வகையில் கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சி தலைவர்களில் ஒருவரான அசம் கான் ‘ஒற்றை பிள்ளைக்கு கூட வழியில்லாதவருக்கு இந்த அறிவுரையை கூற என்ன உரிமை உள்ளது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் நகரில்நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் பேசிய பா.ஜ.க. எம்.பி. சாக்‌ஷி மஹராஜ், ’இந்துப் பெண்கள் நான்கு குழந்தைகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஒரு குழந்தையை சாதுவாக்கி விடுங்கள்.

ஒரு குழந்தையை தர்மவானாக்கி விடுங்கள். தற்போது எல்லைப்பகுதியில் தொடர்ந்து அத்துமீறல்கள் நடைபெறுவதால் ஒரு குழந்தையை எல்லைப்பகுதிக்கு அனுப்புங்கள். ஒரு குழந்தையை மட்டும் உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சி தலைவர்களில் ஒருவரான அசம் கான், ‘இந்துப் பெண்கள் 4 பிள்ளைகளை பெற வேண்டும் என்று அறிவரை கூற ஒற்றை பிள்ளைக்கு வழியில்லாதவருக்கு என்ன உரிமை உள்ளது? (சாக்‌ஷி மஹராஜ் திருமணமே செய்து கொள்ளாதவர் என்பது குறிப்பிடத்தக்கது) என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், நமது மாமன்னருக்கும் (மோடி) ஒரு குழந்தை கூட இல்லை என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வழுக்கைத் தலையில் முடி முளைக்க பசு மாட்டு சிறுநீர் குடிக்கும் வட இந்தியர்கள்!!
Next post சிவகங்கையில் பிளஸ்–2 மாணவிகள் 2 பேர் தற்கொலை!!