தனியார் பள்ளியில் மாணவியிடம் ஈவ்டீசிங் செய்த மாணவன் கைது!!

Read Time:2 Minute, 17 Second

86b0fbc5-e9b8-4dc3-a717-af131bea5fae_S_secvpfவள்ளியூரில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் ராணி (வயது17). என்ற மாணவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிளஸ்–2 படித்து வந்தார். இவர் பள்ளிக்கூடத்துக்கு வரும் போது, நாங்குநேரி அருகே உள்ள வாகைக்குளத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் கந்தையா (17) என்ற அதே பள்ளிக்கூடத்தில் பிளஸ்–2 படிக்கும் மாணவன் அடிக்கடி கேலி–கிண்டல் செய்து வந்தார்.

நேற்று பிளஸ்–2 மாணவ– மாணவிகளுக்கு மாடல் தேர்வு நடந்தது. இதில் மாணவி ராணி ஜன்னல் அருகே அமர்ந்து தேர்வு எழுதினார். சீக்கிரமே தேர்வு எழுதி முடித்து விட்டு வெளியே வந்த மாணவன் கந்தையா, ஜன்னல் அருகே சென்று மாணவியை பட்ட பெயரை வேகமாக கூறி கேலி செய்துள்ளார்.

மாணவி எச்சரித்தும் கேட்காமல் மீண்டும், மீண்டும் கேலி செய்ததால், ராணி அவமானத்தால் அழுது கொண்டே தலைமை ஆசிரியர் அறைக்கு சென்று புகார் செய்தார்.

தலைமை ஆசிரியர் கருணா ராஜ், மாணவரை கண்டிக்க அழைத்துள்ளார். ஆனால் மாணவர் ஓடிவிட்டாராம். இதனால் தலைமை ஆசிரியர் கருணாராஜ், வள்ளியூர் போலீசில் புகார் செய்தார்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் பிரேம்சந்த், சப்–இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி மாணவன் கந்தையாவை கைது செய்தனர். இன்று அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கிறார்கள்.

பிளஸ்–2 தேர்வு நெருங்கும் வேளையில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குதிகால் வெடிப்பைப் போக்கும்; சில இயற்கை வைத்தியங்கள்…!!
Next post வரதட்சணை கொடுக்காததால் கணவர் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்ததாக புதுப்பெண் புகார்!!