உ.பி.யில் ஓடும் ரெயிலில் ஈவ் டீசிங்: ஆப்கானிஸ்தான் வாலிபர் கைது!!
Read Time:1 Minute, 14 Second
புதுடெல்லி-ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த பெண்ணை ஈவ் டீசிங் செய்ததாக ஆப்கானிஸ்தான் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலைச் சேர்ந்த இசாத் கான் என்பவர் டெல்லி-ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று பயணம் செய்தார். அலகாபாத் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் புறப்பட்டபோது தனது பெட்டியில் பயணம் செய்த ஒரு பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாகவும், ஈவ் டிசிங் செய்ததாகவும் அந்தப் பெண் புகார் அளித்தார்.
இதையடுத்து முகல்சராய் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றபோது, இசாத் கானை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுவதாக ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.
Average Rating