டெல்லியில் மீண்டும் இளம்பெண் கற்பழித்து கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்!!

Read Time:3 Minute, 43 Second

7f229fd2-5429-4a30-b1d7-3b4754110f17_S_secvpfதலைநகர் டெல்லியில் கற்பழிப்பு சம்பவங்கள் பெருகி வருகிறது. 2 ஆண்டுகளுக்கு முன் மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அப்போதைய காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து மக்கள் பெரும் போராட்டம் நடத்தினார்கள். கற்பழிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகும் கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கால்டாக்சியில் பயணம் செய்த இளம் பெண்ணை டிரைவர் கற்பழித்த கொடுமை நடந்தது. இந்த வழக்கில் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் டெல்லியில் மீண்டும் ஒரு பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். தெற்கு டெல்லியில் சுல்தான்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் அந்த பெண்ணின் பிணம் கிடந்தது. காவலாளி ஒருவர் பெண் பிணத்தை பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

டெல்லி வளர்ச்சி கழகத்துக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தப்பட்டு இருந்த பஸ்களுக்கு பின்னால் பிணம் கிடந்தது. உடலில் துணிகள் எதுவுமில்லால் அரை நிர்வாணமாக கிடந்தது. கால்கள் கட்டப்பட்டு இருந்தது. உடல் உறுப்புகள் கொடூரமாக சிதைக்கப்பட்டு இருந்தது.

இந்த பெண்ணின் கணவர் சில வருடங்களுக்கு முன் விபத்தில் சிக்கிக் கொண்டார். அவரால் வேலை செய்ய முடியவில்லை. கணவர் மற்றும் 3 மகள்களை காப்பாற்ற அந்த பெண் துணி ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். தினமும் வேலை முடிந்து இரவு 7 மணி அளவில் சுல்தான்பூரில் உள்ள வீட்டுக்கு திரும்புவார்.

இரவு 8 மணி வரை அவர் வீடு திரும்பவில்லை. செல்போனும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. அந்த பெண்ணின் தோழியிடம் விசாரித்தபோது மாலை 6 மணிக்கே வீட்டுக்கு புறப்பட்டு சென்று விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இரவு முழுவதும் தேடினார்கள். இந்த நிலையில் நேற்று காலையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்த பெண்ணை மர்ம கும்பல் பின் தொடர்ந்து கடத்தி கற்பழித்து கொலை செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

பெண்ணின் பிணம் பிரேத பரிசோதனைக்காக எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பெண்ணை கற்பழித்து கொடூரமாக கொன்ற கும்பலை போலீஸ் படை டெல்லி முழுவதும் தேடி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிகிச்சைக்கு வந்த கல்லூரி மாணவியை கற்பழித்த அரசு மருத்துவர் சஸ்பெண்ட்!!
Next post பெங்களூரில் ஐ.டி.பெண் ஊழியர் குளிப்பதை படம் பிடித்த பெயிண்டர் கைது!!