சிகிச்சைக்கு வந்த கல்லூரி மாணவியை கற்பழித்த அரசு மருத்துவர் சஸ்பெண்ட்!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அரசு அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
சத்தீஷ்கர் மாநிலம் சுமேலாவில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றுபவர் கௌதம் பண்டிட். இவர், கடந்த ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி சிகிச்சைக்காக வந்த 22 வயது கல்லூரி மாணவியைக் கற்பழித்ததாக வந்த புகாரையடுத்து நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி கடந்த புதன் கிழமை காவல் துறையில் அளித்த புகாரில் கடந்த வருடம் ஜூன் மாதம் விபத்தில் அடிபட்டு சிகிச்சைக்காக லால் பகதூர் சாஸ்திரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அப்போது மருத்துவர் கௌதம் பண்டிட் மற்றும் இரண்டு போலீஸ் கான்ஸ்டபிள்கள் தன்னை கற்பழித்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து மருத்துவர் மற்றும் காவலர்கள் இருவரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மருத்துவமனைக்கு வரும் அப்பகுதி பெண்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating