9 நாளில் கசந்த திருமண வாழ்க்கை: தாலியை கழற்றி கொடுத்துவிட்டு சென்ற பேராசிரியை!!

Read Time:3 Minute, 15 Second

c408e337-dbdd-4037-9f4f-c25d0601e713_S_secvpfமார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த பேராசிரியை ஒருவருக்கும் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கடந்த டிசம்பர் மாதம் 27–ந்தேதி திருமணம் நடந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பேராசிரியை தனது கணவருடன் தாய் வீட்டுக்கு விருந்திற்கு சென்றிருந்தார். 5–ந்தேதி தாய் வீட்டில் இருந்து தான் பணியாற்றும் கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு பேராசிரியை சென்றார். ஆனால், அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிபோன அவரது தாயார் மகளை பல இடங்களிலும் தேடினார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதனால், அவர் இதுபற்றி இரணியல் போலீசில் புகார் செய்தார். புகாரில் கல்லூரிக்கு சென்ற தனது மகள் மாயமாகிவிட்டதாகவும் அவரை கண்டுபிடித்து தரும்படியும் கூறி இருந்தார். இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை பேராசிரியை இரணியல் போலீஸ் நிலையத்தில் திடீரென்று ஆஜரானார். தனக்கு திருமண வாழ்க்கை பிடிக்காததால் தோழி வீட்டுக்கு சென்று இருந்ததாகவும் கணவருடன் வாழ விரும்பவில்லை என்றும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் பேராசிரியையின் கணவர், தாயார் மற்றும் உறவினர்களையும் போலீஸ் நிலையம் வரவழைத்து சமரச பேச்சு நடத்தினார்கள். அப்போதும் தனது முடிவில் பேராசிரியை பிடிவாதமாக இருந்தார்.

இதனால் விருப்பம் இல்லாத மனைவியுடன் தானும் வாழ ஆசைப்படவில்லை என்றும், விவாகரத்து பெற தயார் என்றும் பேராசிரியை கணவர் கூறினார். ஆனால், பேராசிரியையின் தாயார் தனது மகளிடம் கணவருடன் சேர்ந்து வாழும்படி கூறி கெஞ்சினார். நீண்ட நேரம் நடந்த பாச போராட்டம் பலன் அளிக்கவில்லை. கணவருடன் வாழ விரும்பவில்லை. தாயுடனும் செல்லமாட்டேன். தோழி வீட்டிற்கே செல்ல போகிறேன் என்று பேராசிரியை உறுதியாக கூறி விட்டார்.

இதனால் திருமணத்தின்போது போட்ட நகைகளை தரும்படி அவரிடம் தாயார் கேட்டார். உடனே பேராசிரியை தாலி உள்பட அனைத்து நகைகளையும் கழற்றி தாயாரிடம் கொடுத்துவிட்டார். அதன்பிறகு போலீசார் அவர்களிடம் எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ம.பி.யில் உயர் வகுப்பு பெண்ணை காதலித்த தலித் வாலிபர், காதலுக்கு துணை நின்ற நண்பர்கள் எரித்துக் கொலை!!
Next post மனைவி கோபித்து சென்றதால் 2 குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கணவன்!!