ஈரோடு அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியை தற்கொலை!!

Read Time:1 Minute, 13 Second

b5dd0741-5b08-4008-b1a4-b4b27f8cccd4_S_secvpfஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே உள்ள அன்னை நகர் என்ற இடத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி ரேவதி (வயது 44).

இவர் அனுமன்பள்ளியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலைபார்த்து வந்தார்.

இவர் தைராய்டு நோயினால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவருக்கு மூட்டு வலியும் இருந்து வந்தது. இதற்காக அவர் பல இடங்களில் வைத்தியம் பார்த்தும் நோய் குணமாகவில்லை.

இதனால் மனம் உடைந்த நிலையில் அவர் காணப்பட்டார். இதை தொடர்ந்து நேற்று ரேவதி சல்பாஸ் என்ற விஷ மாத்திரையை தின்று விட்டார்.

இதனால் மயங்கிய நிலையில் கிடந்த அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் ரேவதி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிவகங்கையில் பிளஸ்–2 மாணவிகள் 2 பேர் தற்கொலை!!
Next post சிகிச்சைக்கு வந்த கல்லூரி மாணவியை கற்பழித்த அரசு மருத்துவர் சஸ்பெண்ட்!!