குடும்பத் தகராறில் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி!!

Read Time:1 Minute, 42 Second

bb1f4112-a37e-4db8-bb15-b9f426df139d_S_secvpfகரூர் டவுண் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணி புரிந்து வருபவர் புகழ்செல்வி (வயது 35). இவரது கணவர் குமாரவேல். இவர் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணி புரிந்து வருகிறார். இந்த தம்பதியினர் அங்குள்ள வடிவேல் நகர் போலீஸ் குடியிருப்பில் தங்கி உள்ளனர். இவர்களுக்கு தற்போது 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

சமீபகாலமாக கணவன்– மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்றும் அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த புகழ்செல்வி வீட்டில் இருந்த சோப்ஆயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதை பார்த்த குமாரவேல், புகழ்செல்வியை மீட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சம்பவம் குறித்து கரூர் கோர்ட் மாஜிஸ்திரேட் ஆஸ்பத்திரிக்கு சென்று புகழ்செல்வியிடம் வாக்கு மூலம் பெற்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கரூர் போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாண்ட்… ஜேம்ஸ் பாண்ட்!!
Next post ரெயிலில் பயணம் செய்த ஆக்கி வீராங்கனை மாயம்: பயிற்சியாளர் மீது புகார்!!