செம்மறி ஆட்டால் குழந்தை பெற மறுக்கும் மக்கள்!!
மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த சீனாவில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் அமலில் இருந்தது. இதனால் பெண்கள் தட்டுப்பாடு மற்றும் மனித ஆற்றல் குறைந்தது. அதை தொடர்ந்து தற்போது அத்திட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
2–வது குழந்தை பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இந்த ஆண்டு புதிதாக 20 லட்சம் குழந்தைகள் பிறக்கும் என சீன அரசு எதிர்பார்த்தது.
ஆனால், எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாக உள்ளது. தற்போது 2–வது குழந்தை பெற 10 லட்சம் தம்பதிகள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். அதற்கு செம்மறி ஆடு ஆண்டே காரணமாக கூறப்படுகிறது.
சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் மிருகங்களின் பெயரால் வருகிறது. அதன்படி அடுத்த ஆண்டு செம்மறி ஆடு ஆண்டாகும். அது வருகிற பிப்ரவரியில் தொடங்குகிறது. செம்மறி ஆடு ஆண்டு ராசியில்லாத ஆண்டு ஆக கருதப்படுகிறது.
எனவே, இந்த ஆண்டில் குழந்தை பெற சீன தம்பதிகள் தயங்குகின்றனர். அதனால் அரசு நிர்ணயித்திருந்த 20 லட்சம் குழந்தைகள் பிறக்கும் இலக்கு நிறைவேறாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Average Rating