கணவர் இறுதி சடங்கில் மனைவி திடீர் சாவு: இருவர் உடலும் ஒரே நேரத்தில் அடக்கம்!!

Read Time:1 Minute, 21 Second

65ab4a85-9036-4104-ae75-10e3151c1c36_S_secvpfதிட்டக்குடி அருகே உள்ள கொடிகளம் தோப்பு காலனியை சேர்ந்தவர் குள்ளன் (வயது 90). இவரது மனைவி வள்ளியம்மை (82). இவர்களுக்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர். கணவன்–மனைவி இருவரும் இணைபிரியாத தம்பதியாக வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் குள்ளன் வயது முதிர்ச்சி காரணமாக நேற்று முன்தினம் இறந்து விட்டார். அவர் இறந்ததிலிருந்து வள்ளியம்மை அழுது புலம்பியபடியே இருந்தார்.

நேற்று குள்ளனின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தன. அப்போது வள்ளியம்மை கதறி அழுதார். திடீரென அவர் மயங்கி விழுந்தார். அவர் மயக்கத்தை தெளிய வைக்க உறவினர்கள் முயற்சித்தனர். ஆனால் மயக்கம் தெளியவே இல்லை. அவரது உயிர் பிரிந்தது.

இதன் காரணமாக குள்ளனின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன. பின்னர் இருவருக்கும் ஒரே நேரத்தில் இறுதி சடங்கு நடத்தப்பட்டு பிணங்களை எடுத்து சென்றனர். அவர்களுடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செம்மறி ஆட்டால் குழந்தை பெற மறுக்கும் மக்கள்!!
Next post ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கம்?