எழும்பூர் பெண் போலீசுக்கு செல்போனில் தொல்லை: பெயிண்டர் கைது!!
எழும்பூர் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் சரண்யா (26). இவர் தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவரது கணவரும் போலீஸ்காரர் ஆவார். போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிகிறார்.
சரண்யா செல்போனுக்கு கடந்த 7–ந்தேதி அடையாளம் தெரியாத நபர் போன் செய்தார். அந்த போனை சரண்யா துண்டித்து விட்டார். அதன்பிறகு தொடர்ந்து அந்த நபர் போன் செய்து கொண்டே இருந்தார். ஓடிப்போய் திருமணம் செய்து கொள்வோமா என்றும் அருவறுப்பாகவும் பேசினார். சரண்யா எச்சரித்தும் அந்த வாலிபர் கண்டு கொள்ளவில்லை.
இதையடுத்து சரண்யா எழும்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் செல்போன் கம்பெனி உதவியுடன் வாலிபரின் முகவரியை கண்டுபிடித்தனர். இதன்மூலம் அவரது பெயர் பார்த்திபன் (21) பெயிண்டர். திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது.
அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். செல்போன் ரீசார்ஜ் செய்யும்போது அந்த கடையில் புத்தகத்தில் எழுதி வைத்திருந்த எண்ணைப் பார்த்து போன் செய்ததாக கூறினார். அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Average Rating