திருவல்லிக்கேணி லாட்ஜில் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை!!

Read Time:1 Minute, 10 Second

8ca02342-53cd-4f27-96ca-c0f84ad58987_S_secvpfதிருவல்லிக்கேணி அலிகான் பதூர் தெருவில் உள்ள ஒரு லாட்ஜில், 38 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அறை எடுத்து தங்கினார். அவர் தங்கி இருந்த அறையின் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் மாற்று சாவி போட்டு கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் பிணமாக கிடந்தார்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் திருவல்லிக் கேணி போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அவரது பெயர் ரவிச்சந்திரன் (38) என்பது தெரியவந்தது. தி.நகரில் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்த அவர் சில நாட்களுக்கு முன்னர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணத்துக்கு பின்னரும் மறக்க முடியாத காதல்: 2 வருடமாக கணவரை நெருங்க விடாத பெண்!!
Next post ஒருதலை காதல்: காதலை ஏற்க பெண் மறுத்ததால் ஊமத்தங்காயை தின்ற லோடு மேன்!!