பொங்கல் செலவுக்காக பெண்ணிடம் நகை பறித்த என்ஜினீயர் கைது!!

Read Time:1 Minute, 49 Second

f156c842-913d-4c5f-b01b-c1bc6c349af3_S_secvpfசென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று மாலை, 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் அந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். அந்த வாலிபருடன், அந்த பெண் போராடினார்.

எனினும் 1½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு அந்த வாலிபர் ஓட்டம் பிடித்தார். அந்த பெண் ‘‘திருடன்…, திருடன்…’’ என்று சத்தம் போட்டார். இதையடுத்து சாலையில் சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அந்த வாலிபரை விரட்டி சென்று பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து அந்த வாலிபரை திருவல்லிக்கேணி போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், பிடிபட்ட வாலிபர் பெயர் ரவி (23) என்பதும், திருவொற்றியூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த இவர் பட்டாபிராமில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ‘சிவில் என்ஜினீயரிங்’ படித்து இருப்பதும் தெரியவந்தது.

பொங்கல் பண்டிகையை தன்னுடைய நண்பர்களுடன் ஜாலியாக கொண்டாடுவதற்கு பணம் இல்லாததால், நகைப்பறிப்பில் ஈடுபட்டதாக ரவி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கங்கையில் மிதந்து வந்த 108 பிணங்கள் மீட்பு: விசாரணை நடத்த உத்தரவு!!
Next post பஹத் பாசிலுடன் இணையும் பிசாசு நாயகி!!