திருப்பத்தூர் அருகே நர்சிங் மாணவியை தொடர்ந்து சகோதரியும் தற்கொலை: ஒரே வீட்டில் 2 பேர் இறந்ததால் பரபரப்பு!!

Read Time:1 Minute, 39 Second

d0bbfaa3-0ddc-4557-ba7e-aa8883914b53_S_secvpfசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருஉடையார்பட்டியை சேரந்தவர் முத்துராஜ். இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர்.

இதில் மூத்த மகள் வித்யா (வயது 20) இவர், திருப்பத்தூரில் உள்ள மருந்துகடையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 8–ந்தேதி வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து வித்யா மயங்கினார்.

அவரை, உறவினர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று வித்யா பரிதாபமாக இறந்தார்.

இவரது தங்கையான நர்சிங் கல்லூரி மாணவி வினிதா (19) கடந்த 3–ந்தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து வித்யாவும் தற்கொலை செய்திருப்பது திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அவர்களது தாய் தெய்வானை, திருப்பத்தூர் நகர போலீசில் புகார் செய்தார். சப்– இன்ஸ்பெக்டர் மாதவ குருநாதன் வழக்குப்பதிவு செய்து சகோதரிகள் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுரையில் போலீஸ் கமிஷனர் அலுவலக அதிகாரி வீட்டில் 50 பவுன் கொள்ளை!!
Next post சங்கரன்கோவில் அருகே சொத்து தகராறில் விவசாயி அடித்துக்கொலை: தாய்– மகனுக்கு வலைவீச்சு!!