மதுரையில் போலீஸ் கமிஷனர் அலுவலக அதிகாரி வீட்டில் 50 பவுன் கொள்ளை!!
Read Time:1 Minute, 8 Second
மதுரை சர்வேயர் காலனி, பாண்டியன் நகரை சேர்ந்தவர் பாஸ்கர ராஜா. இவர் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அமைச்சு பணியாளர்களின் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்று உள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இவர் குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார். இதனால் வீடு பூட்டப்பட்டு இருந்தது.
இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அவர்கள் அங்கு பீரோவில் இருந்த 50 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் விரைந்து சென்று தடயங்களை சேகரித்தனர்.
Average Rating