வேலூர் ஜெயிலில் சுவரில் இருந்து தவறி விழுந்த கைதி சாவு!!
Read Time:54 Second
வாணியம்பாடியை சேர்ந்தவர் முபாரக்(38), இவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 14ம் தேதி ஜெயிலில் உள்ள 4 அடி உயர சுவரில் ஏறி பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது தவறி விழுந்து படுகாயமடைந்தார். உடனடியாக அவரை ஜெயிலில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முபாரக் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating