கொலை செய்வதாக மிரட்டி 2 மாதங்களாக இளம்பெண்ணை கற்பழித்த அண்ணன்–தம்பி கைது!!
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள குந்துமாரகப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் திஷா(வயது 27). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டை விட்டு சென்றார். அதன் பிறகு அவர் நீண்ட நேரம் கழித்து வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டார். மிகவும் களைப்பாக இருந்தார்.
இதனால் பதட்டம் அடைந்த அவரது தாய் மகள் திஷாவிடம் ஏன் வீட்டுக்கு வர இவ்வளவு தாமதமாகியுள்ளது என்றும், ஏன் மிகவும் சோர்வாக காணப்படுகிறாய் என்றும் கேட்டார்.
அப்போது அவர், குந்துமாரன பள்ளியை சேர்ந்த கில்லப்பா என்பவரின் மூத்த மகன் ராமமூர்த்தி (வயது 20), 2–வது மகன் முனிராஜ்(18) ஆகிய 2 பேரும் சேர்ந்து ஊர் பக்கத்தில் உள்ள மறைவான இடத்திற்கு தன்னை கொண்டு சென்றனர். அங்கு வைத்து 2 பேரும் சேர்ந்து தன்னை மிரட்டி மாறி, மாறி கற்பழித்தனர். இதனை பற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் உன்னை கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டினர்.
இதேபோல் 2 பேரும் சேர்ந்து தொடர்ந்து மிரட்டி கடந்த 2 மாதங்களாக தன்னை கற்பழித்து வந்தனர் என்று தாயிடம் கண்ணீர் மல்க கதறி அழுதவாறு கூறினார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபர் ராமமூர்த்தி, அவரது தம்பி முனிராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணையில் நடத்தினர்.
விசாரணையில் இளம்பெண் திஷா 2 பேரும் சேர்ந்து கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து கற்பழித்து வந்தது உண்மை என தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் போச்சம்பள்ளி ஜே.எம்.1 நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். ஜே.எம்.1 நீதிபதி 15 நாள் காவலில் அண்ணன்–தம்பி பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி அவர் ஓசூர் கிளை சிறைக்கு கொண்டு சென்று அங்கு அடைக்கப்பட்டார்.
இளம்பெண்ணை கற்பழித்த வாலிபர் ராமமூர்த்தி டிராக்டர் டிரைவர் ஆவார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating