கூடங்குளம் அருகே விதவை பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை: போலீஸ்காரர் கைது!!
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஆவரைகுளத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி உஷா (வயது 31). கூடங்குளம் அணுமின்நிலையத்தில் பணியாற்றி வந்த முருகேசன் சமீபத்தில் இறந்தார்.
இந்நிலையில் உஷா கணவர் இறந்ததற்கான பணப்பலன்களை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு தேவையான உதவிகளை ஆவரைகுளத்தை சேர்ந்தவரும் சங்கரன்கோவில் திருவேங்கடம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் முருகேசன் (46) என்பவர் செய்து வந்துள்ளார். உஷாவை கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு அழைத்துசெல்வது, தாலுகா அலுவலகத்திற்கு சென்று சான்றிதழ் பெற்று கொடுப்பது என பல்வேறு உதவிகளை செய்துள்ளார். அதற்கான செலவை முருகேசனே ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட முருகேசன் உஷாவுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததோடு, தன்னுடன் ஆசைக்கு இணங்குமாறும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் இதற்கு உஷா மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த முருகேசன் உஷாவிடம் நான் உனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார். மேலும் செலவு செய்த பணத்தையும் உஷாவிடம் திரும்ப கேட்டுள்ளார்.
இது குறித்து உஷா கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி முருகேசன் மீது பணம் கேட்டு மிரட்டியது, பெண் வன்கொடுமை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். விதவை பெண்ணுக்கு போலீஸ்காரர் செக்ஸ் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating