பீகாரில் ஆசிட் வீசிய பெண்: ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதி!!
Read Time:1 Minute, 11 Second
பீகாரில் பெண் ஒருவர் ஆசிட் வீசியதில் காயமுற்ற ஐந்து பேர் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பீகாரின் மாதேபுரா மாவட்டத்தில் வசித்து வருபவர் பிரபா ஷா. இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜனார்தன் பாஸ்வானுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமுற்ற பிரபா, பாஸ்வான் மற்றும் அவரது மூன்று குடும்ப உறுப்பினர்கள் மீது ஆசிட்டை ஊற்றினார். அப்போது உடனிருந்த இன்னொரு குடும்பத்தைச் சேர்ந்த எட்டு வயது குழந்தையின் மீதும் ஆசிட் பட்டது.
இந்த சம்பவத்தில் காயமுற்ற ஐந்து பெரும் உடனடியாக அருகில் உள்ள சதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளியான பிரபாவின் மீது மதேரா மாவட்ட காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Average Rating