கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!!
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். அவரது கிளினிக்கையும் அடித்து நொறுக்கினர்.
உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் நகரின் பக்பத் சாலையில் உள்ள கிளினிக்கிற்கு, கைவலிக்கு சிகிச்சை பெறுவதற்காக கல்லூரி மாணவி ஒருவர் தனது அத்தையுடன் வந்துள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர் அர்பிட் தியாகி, பிஸியோதெரபி சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி மாணவியை தனி அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அறையிலிருந்து சில நிமிடங்களில் வெளியே ஓடிவந்த மாணவி தனது அத்தையிடம் மருத்துவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அழுதபடி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த மாணவியின் குடும்பத்தினரும், பொதுமக்களும் கிளினிக்கிற்குத் திரண்டு வந்து தியாகியைத் தாக்கினர். அவர் தப்பி ஓடி விடவே, கிளினிக்கை அடித்து நொறுக்கினர்.
மருத்துவரின் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் அவரைக் கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மூத்த காவல் கண்காணிப்பாளர் ஓம்சிங் தெரிவித்தார்.
Average Rating