மாதவரத்தில் வீட்டு பூட்டை உடைத்து கொள்ளை!!
Read Time:36 Second
மாதவரம் 200 அடி சாலை செல்வம் நகரை சேர்ந்தவர் முனுசாமி. இவர் கடந்த 15–ந்தேதி குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்றார்.
நேற்று மாலை அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த ரூ.1½ லட்சம் பணம் கொள்ளை போயிருந்தது.
இதுகுறித்து மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating