தானாக தீப்பற்றி எரியும் குழந்தையின் தாய்க்கு தீவிர மருத்துவ பரிசோதனை: டாக்டர்கள் முடிவு!!
ராஜேஸ்வரிக்கு பிறந்த 2 குழந்தைகளின் உடலிலும் அடுத்தடுத்து தானாகவே தீப்பிடித்ததாக வெளியாகி இருக்கும் தகவல் மருத்துவ உலகில் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
இது தொடர்பாக சுகாதார துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
தீப்பிடித்த குழந்தையின் உடலில் ஏற்பட்டிருக்கும் காயங்கள் குணமாவதற்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போது எங்களது கவனம் முழுவதுமே குழந்தைக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிப்பதில் தான் உள்ளது.
மரபியல் ரீதியாக குழந்தையின் உடலில் தீப்பிடித்ததா? என்பது பற்றி ஆய்வு செய்து வருகிறோம். இதற்காக தாய் ராஜேஸ்வரிக்கு முழுமையாக உடல் பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளோம்.
சிறுவயதில் அவருக்கும் இதுபோன்று நடந்திருந்ததா? என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் ஒரு சிலருக்கு ‘‘தன்னையே புண்படுத்தும் வியாதி’’ இருக்கும். அது போன்ற வியாதியால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தங்களை வருத்திக் கொள்வார்கள். அல்லது தங்களை சுற்றி இருப்பவர்களை கொடுங்காயம் ஏற்படுத்தி துன்புறுத்துவார்கள்.
இதுபோன்ற நோய் எதுவும் ராஜேஸ்வரிக்கு உள்ளதா? என்பது பற்றியும் பரிசோதனை செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நெடுமொழியனூரில் குழந்தைக்கு சிகிச்சை அளித்த டாக்டர் பாரதிதாசன் கூறியதாவது:–
குழந்தையை வீட்டில் உள்ள மற்றவர்கள் எடுத்து வைத்து இருந்த போது தீப்பிடிக்கவில்லை. தாயார் பராமரிப்பில் இருக்கும் போது மட்டும் தான் தீப்பிடிக்கிறது. எனவே தாயாரையும் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.
ஏற்கனவே முதல் குழந்தை உடலில் தீப்பிடித்த போது அதை பரிசோதித்த சென்னை டாக்டர்கள் தீப்பிடிப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்று கூறி இருக்கிறார்கள்.
எனவே தாயாரை பரி சோதனை செய்ய வேண்டியது முக்கியமானதாகும்.
Average Rating