புலிக்காக 260 தங்க நாணயம் வழங்கிய விஜய்!!

Read Time:2 Minute, 12 Second

vijayinside‘புலி’ படத்தில் பணியாற்றும் 260 தொழிலாளர்களுக்கு விஜய் தங்க நாணயம் பரிசு வழங்கியுள்ளார். விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இரு மாதங்களாக நடந்தது. பிரமாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

விஜய் மற்றும் ஜோடியாக நடிக்கும் சுருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. டூயட் காட்சியும் படமானது. நடிகை ஸ்ரீதேவியும் இதில் நடித்தார். அதன் பிறகு படப்பிடிப்பை தலக்கோணம் பகுதிக்கு மாற்றினர். அங்கு பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

பொங்கல் விழாவை அங்கேயே படக்குழுவினருடன் விஜய் கொண்டாடினார். அவர்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கினார். துணை நடிகர், நடிகைகள், லைட்மேன்கள், வாகனம் ஓட்டுபவர்கள், சமையல்காரர்கள், படப்பிடிப்பு உதவியாளர்கள் தயாரிப்பு நிர்வாகிகள், டைரக்ஷன் உதவியாளர்கள், ஆர்ட் டைரக்டர்கள், ஊழியர்கள் என 260 பேருக்கு ஆளுக்கொரு தங்க நாணயத்தையும் லட்டையும் விஜய் வழங்கினார்.

விஜய் தங்க நாணயம் வழங்கியதும் படக்குழுவினர் நெகிழ்ச்சியானார்கள். விஜய் கையை பிடித்துக் கொண்டு பலர் நன்றி தெரிவித்தனர். ஒவ்வொரு பொங்கல் பண்டிகையையும் ஏழைகளுக்கு உதவிகள் வழங்குவதை விஜய் வழக்கமாக வைத்து இருக்கிறார். அதன்படி தங்க நாணயங்களை வழங்கி உள்ளார்.

‘புலி’ படத்தை சிம்பு தேவன் இயக்குகிறார். பி.டி.செல்வகுமார், சிபு இணைந்து தயாரிக்கின்றனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோபி அருகே ஸ்கூட்டரில் சென்ற நர்சிடம் 10 பவுன் நகை கொள்ளை: 2 வாலிபர்கள் கைவரிசை!!
Next post ஓமலூர் மகளிர் காவல் நிலையத்தில் ஒரே நேரத்தில் 2 காதல் ஜோடி தஞ்சம்!!