மக்கள் தொகை மெஜாரிட்டி ஆக இந்து பெண்கள் 10 குழந்தைகள் பெற வேண்டும்: சாமியார் வலியுறுத்தல்!!
இந்து பெண்கள் ஒவ்வொருவரும் தலா 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என பா.ஜனதா எம்.பி. சாக்ஷி மகராஜ் சமீபத்தில் விழாவில் பேசினார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சாமியார் ஒருவர் இந்து பெண்கள் தலா 10 குழந்தைகள் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார். அவரது பெயர் ஸ்ரீ வாசுதேவானந்த் சரஸ்வதி. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிகா ஆசிரமத்தின் சங்கராச்சாரியார் ஆவார்.
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் ‘மேகமேளா’ நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்து கொண்டு சங்கராச்சாரியார் ஸ்ரீவாசுதேவானந்த் சரஸ்வதி பேசினார். அப்போது இந்துக்கள் ஒற்றுமையால் தற்போது நரேந்திர மோடி பிரதமர் ஆகி இருக்கிறார்.
அந்த நிலை தொடர வேண்டும். மக்கள் தொகையில் இந்துக்கள் தொடர்ந்து மெஜாரிட்டியுடன் இருக்க ஒவ்வொரு இந்து பெண்ணும் தலா 10 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் அவர் பேசும் போது, விஸ்வ இந்து பரிஷத். பஜ்ரங்தள் உள்ளிட்ட அமைப்புகள் மதமாற்றம் நிகழ்ச்சி நடத்துவதை நியாயப்படுத்தினார். கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும் சீக்கிய மதங்களுக்கு சென்றவர்கள் அனைவரும் இந்துக்கள் தான். இங்கிருந்து தான் அவர்கள் மதங்கள் மாறினார்கள்.
அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது தாய் மதத்துக்கு திரும்ப வேண்டும். அவர்கள் மதம் மாறுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கையோ, தடை செய்வதோ கூடாது என்றும் அவர் கூறினார்.
Average Rating