ரேணிகுண்டா அருகே ரெயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை!!

Read Time:2 Minute, 29 Second

3211ed74-00c4-4210-9874-6a62d83415a1_S_secvpfரேணிகுண்டா அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் 2 பிணங்கள் கிடப்பதாக ரேணிகுண்டா ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ரமணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அப்போது ஆண் பிணத்தின் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போன், மின்சார கட்டண ரசீது ஆகியவற்றில் இருந்த முகவரியை வைத்து உறவினர்களிடம் விசாரணை நடத்தியபோது, பிணமாக கிடந்த ஆண், கர்நாடக மாநிலம் அப்பகுண்டனஹள்ளி கிராமத்தை சேர்ந்த முரளி (வயது 29) என்றும், அவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதிக்கு வந்து, டைல்ஸ் கற்கள் பதிக்கும் வேலை பார்த்து வந்ததும், திருப்பதி புறநகர் மண்டலம் காட்டுத்தோப்பு தெருவில் தனிமையில் வசித்து வந்ததும் தெரிய வந்தது.

அதேபோல், பிணமாக கிடந்த பெண் மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த மற்றொரு முரளியின் மனைவி அமராவதி என்றும், கணவன்–மனைவி இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதிக்கு வந்து காட்டுத்தோப்பு அருகில் உள்ள ரிக்ஷா காலனியில் வசித்து வந்ததும் தெரிய வந்தது. கணவன், மனைவி மற்றும் முரளி (29) ஆகிய 3 பேரும் கூட்டாக டைல்ஸ் கற்கள் பதிக்கும் வேலை பார்த்து வந்துள்ளனர்.

3 பேரும் ஒரே இடத்தில் வேலை பார்த்தபோது, அமராவதிக்கும், முரளி (29)க்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது, அவர்களின் கள்ளக்காதல் விவகாரம் கணவர் முரளிக்கு தெரிய வந்ததும், அவரால் தங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என கருதிய கள்ளக்காதல் ஜோடி ரேணிகுண்டாவை அடுத்த பெருமாள்பள்ளி அருகே லட்சுமிபுரம் பகுதியில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனதில் பட்டதை சொல்லுங்கள்…!!
Next post குடியிருப்பு, தோட்டம் ஆகியவற்றின் மதிப்பை தவறாக காட்டினாராம் ஜெயா!!