திரிபுராவில் சிறுமியை உயிரோடு புதைக்க முயன்ற தந்தை சிறையில் அடைப்பு!!
Read Time:1 Minute, 7 Second
திரிபுரா மாநிலம் புதியா கிராமத்தைச் சேர்ந்தவர் அபுல்உசேன் (வயது 32). இவரது மகள் ருக்ஷனா (9). மகள் மீது வெறுப்பு அடைந்த அபுல்உசேன், கடந்த 2 நாட்களுக்குமுன்பு சிறுமியின் கை, கால்களை கட்டி வீட்டின் பின்புறம் பெரிய அளவில் குழி தோண்டி உயிருடன் புதைக்க முயன்றார்.
இதனை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் சிறுமியை உயிருடன் மீட்டனர். பின்னர் தப்பி ஓடிய அபுல்உசேனை பிடித்து கலம்சவுரா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அபுல்உசேனை கைது செய்து, சோனாமுரா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, அவரை 3 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அபுல்உசேன் சிறையில் அடைக்கப்பட்டார்.
Average Rating