திண்டுக்கல்: கள்ளக்காதலனை அப்பா என அழைக்க வலியுறுத்தி மகளுக்கு சூடு போட்ட தாய்!!

Read Time:3 Minute, 1 Second

bd485124-75e5-45d4-abf4-a9cdd6966fb4_S_secvpfதிண்டுக்கல் மாவட்டம் வடமதுரை போலீஸ் சரகம் வையம்பட்டியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சுதா (வயது21). இவர்களுக்கு ஸ்ரீபிரியா (4) என்ற மகள் உள்ளார். கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக கணவன்–மனைவி இருவரும் பிரிந்து விட்டனர்.
சுதா அய்யலூர் அருகில் உள்ள வடகளம் பட்டியில் தனது தாய் சின்னபொண்ணுவுடன் வசித்து வந்தார். அந்த சமயத்தில் எரியோட்டை சேர்ந்த பாண்டி என்ற வாலிபருடன் சுதாவிற்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுதா தனது குழந்தையுடன் திடீரென மாயமாகிவிட்டார். அவரது தாய் தனது மகளை பல இடங்களில் தேடி பார்த்தார். அப்போது கள்ளக்காதலன் பாண்டியுடன் சுதா மாயமானது தெரிய வந்தது. பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த சுதா பொங்கலுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு வந்தார்.

பின்னர் அந்த குழந்தையை தாயிடம் விட்டு விட்டு மீண்டும் மாயமானார். குழந்தை ஸ்ரீபிரியாவின் உடலின் பல்வேறு இடங்களில் தீக்காயம் இருந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சின்னபொண்ணு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார்.

விசாரணையில் கள்ளக்காதலனை அப்பா என அழைக்க சொல்லி சுதா பெற்ற குழந்தை என்றும் பாராமல் உடலில் சூடு போட்டது தெரிய வந்தது.

கள்ளக்காதலனுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து தனது குழந்தையை கொடுமைப்படுத்திய சுதா குறித்த தகவல் அந்த கிராமத்தில் காட்டு தீபோல் பரவியது. இது தெரியாமல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த தனது குந்தையை பார்க்க சுதா வந்தார். அவரை பார்த்ததும் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் சுதாவையும், அவளது கள்ளக்காதலனையும் பிடித்து வடமதுரை போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட பாண்டி ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை விட்டு பிரிந்து சுதாவுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மன்னார்குடி அருகே 9 வயது சிறுமி பலாத்காரம்!!
Next post திருமண வயது வராததால் தாலியை கழற்றி கொடுத்துவிட்டு பெற்றோருடன் சென்ற மாணவி!!