ஓமலூர் மகளிர் காவல் நிலையத்தில் ஒரே நேரத்தில் 2 காதல் ஜோடி தஞ்சம்!!

Read Time:4 Minute, 30 Second

71a93f7d-c1bd-4389-8500-719a6116c7c8_S_secvpfசேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கொங்குப்பட்டி பகுதியை சேர்ந்த மாதப்பன் என்பவரது மகன் ராமலிங்கம்(22). ஓமலூரை அடுத்த செம்மேடு பகுதியை சேர்ந்த சுவிதா(17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்கள் ஓமலூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் வேலை செய்யும் இடத்தில் ஒன்றாக பழகியதால் இருவருக்கும் காதல் மலர்ந்தது.

இதையடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஓமலூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். சுவிதாவின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என ஓமலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இவர்களை போலீசார் தேடுவதையறிந்த காதல் ஜோடி ஓமலூர் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இரு வீட்டார் பெற்றோர்களையும் அழைத்து பேசிய போலீசார் பெண்ணுக்கு இன்னும் திருமண வயது அடையவில்லை என கூறி அவரவர் பெற்றோர்களிடம் அறிவுரை கூறிஅனுப்பி வைத்தனர்.

இதே போன்று எடப்பாடி குருவம்பட்டி பெரியநாச்சி பகுதியை சேர்ந்த மணியின் மகள் பிரியா(20). தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். எடப்பாடி கே புதூர் பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் கார்த்திக்(26). இவர் சேலத்தில் பெயிண்ட் அடிக்கும் கூலி வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் இருவரும் காலையில் ஒரே பேருந்தில் சேலம் செல்வது வழக்கம். பேருந்தில் செல்லும் போது ஏற்பட்ட பழக்கத்தால் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் வீட்டை விட்டு வெளியேறி இருவரும் ஓமலூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு அவரது உறவினர்கள் வீட்டில் இருந்தனர். பிரியாவின் பெற்றோர் தங்கள் மகளை காணவில்லை என எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் இவர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் பிரியாவின் பெற்றோருக்கு ஓமலூர் பகுதியில் இருவரும் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் காதலன் கார்த்திக்கை மட்டும் கருக்கல்வாடி என்ற பகுதியில் உள்ள மறைவிடத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் பயந்து போன அவரது உறவினர்கள் மற்றும் காதலி பிரியா ஆகியோர் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து, இது குறித்து போலீசாரிடம் புகார் செய்தனர். பிரியாவின் பெற்றோர் கார்த்திக்கை கூட்டி சென்றதாகவும் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காதலன் கார்த்திக்கை மீட்டு ஓமலூர் கொண்டு வந்தனர்.

இதனால் சாதி கலவரம் ஏற்படுவதை தடுத்து நிறுத்திய போலீசார் சம்பவ இடம் சேலம் கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய பகுதியில் நடைபெற்றதால் அங்கு அனுப்பி வைத்தனர். ஒரே நேரத்தில் இரண்டு காதல் ஜோடி ஓமலூர் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிக்காக 260 தங்க நாணயம் வழங்கிய விஜய்!!
Next post திருவட்டார் அருகே போலீஸ் விசாரணைக்கு சென்ற வாலிபர் விஷம் குடித்து தற்கொலை!!