அம்பை அருகே இளம்பெண்ணை கற்பழித்து கர்ப்பிணியாக்கிய தொழிலாளி கைது!!

Read Time:1 Minute, 27 Second

64b2bdb7-198e-4405-94ea-e23302d28178_S_secvpfஅம்பை அருகே உள்ள செங்குளம் சுடலை மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் நல்லமுத்து (வயது 45). இவர் அந்த பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.

இந்தநிலையில் நல்லமுத்துக்கும், அதே செங்கல்சூளையில் வேலை பார்த்த முத்தம்மாள் (23, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. அப்போது நல்லமுத்து, முத்தம்மாளை 2–வது திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கற்பழித்ததாக கூறப்படுகிறது.

இதில் முத்தம்மாள் 8 மாத கர்ப்பிணி ஆனார். இதனால் அவரும் அவரது பெற்றோரும் நல்லமுத்துவிடம் பேசி 2–வது திருமணம் செய்ய வற்புறுத்தினர். ஆனால் நல்லமுத்து திருமணம் செய்ய மறுத்து ஓடி விட்டார்.

இது குறித்து முத்தம்மாள் அம்பை மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி நல்லமுத்துவை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருவட்டார் அருகே போலீஸ் விசாரணைக்கு சென்ற வாலிபர் விஷம் குடித்து தற்கொலை!!
Next post பர்கூர் வனப்பகுதியில் மாடு மேய்த்த தொழிலாளியை யானை மிதித்து கொன்றது!!