சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற முதியவர் கைது!!
ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பாலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூலி தொழிலாளியான இவருக்கு 5 வயதில் மகள் உள்ளார். இந்த சிறுமியை பக்கத்து வீட்டை சேர்ந்த பொன்னுசாமி(வயது 65). அவ்வப்போது தூக்கி கொஞ்சுவதுடன், சாக்லெட்டும் வாங்கி கொடுப்பாராம்.
இந்த நிலையில் தாயாருடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சாக்லெட் வாங்கி தருகிறேன் என கூறி அழைத்து சென்றார். பின்னர் சாக்லெட் வாங்கி கொடுத்து விட்டு தனது வீட்டுக்கு சிறுமியை அழைத்து சென்றார்.
இதற்கிடையே சிறிது நேரத்தில் வேலைக்கு சென்ற பாலா வீடு திரும்பினார். அவர் மனைவியிடம் மகள் எங்கே? என கேட்டார். அதற்கு அவர் பெரியவர் பொன்னுசாமி தனது வீட்டுக்கு அழைத்து சென்றார் என கூறினார். இதையடுத்து குழந்தையை அழைத்து வருவதற்காக பாலா அவரது வீட்டுக்கு சென்றார்.
அங்கு பொன்னுசாமி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதை கண்டு பாலா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரை கண்டித்து விட்டு மகளை தூக்கி கொண்டு வீடு திரும்பினார். பொன்னுசாமி தப்பி ஓடிவிட்டார்.
இதுபற்றி பாலா ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பொன்னுசாமியை கைது செய்தார்.
Average Rating