2–வது திருமணம் செய்து பெண்ணை ஏமாற்றிய ராணுவ வீரர் மீது வழக்கு!!
நீலகிரி மாவட்டம் மேட்டுச்சேரியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகள் விஜயாம்பிகை (வயது35). இவருக்கும், பரமக்குடி அருகே உள்ள சூசையப்பர் பட்டினத்தை சேர்ந்த ராணுவ வீரர் பிரான்சிஸ் சேவியர் (38) என்பவருக்கும் திருமணம் நடந்தது.
4 நாட்கள் மட்டுமே இருவரும் குடும்பம் நடத்தினர். அதன் பின்னர் வேலைக்கு செல்வதாக கூறி பிரான்சிஸ் சேவியர், வெளியூர் சென்று விட்டார். பின்னர் அவர் ஊர் திரும்பவில்லை.
இதுதொடர்பாக விஜயாம்பிகை, பரமக்குடி வந்து விசாரித்தபோது, பிரான்சிஸ் சேவியருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது தெரியவந்தது. இதுகுறித்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விஜயாம்பிகை புகார் செய்தார்.
அதில், பிரான்சிஸ் சேவியர் முதல் திருமணம் செய்த நிலையில், தன்னை ஏமாற்றி 2–வது திருமணம் செய்து கொண்டார். மேலும் என்னிடம் இருந்த 17 பவுன் நகைகளையும் வாங்கி சென்றுவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜாஸ்மின், ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Average Rating