சேத்துப்பட்டு அருகே 9–ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் கைது!!

Read Time:1 Minute, 41 Second

87826421-6f0b-494b-859b-dbacddd3b7ed_S_secvpfசேத்துப்பட்டு அருகே 14 வயது மாணவி ஒருவர் தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாணவியின் பெற்றோர் வெளியூர் சென்றிருந்தனர்.

அப்போது மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காளிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த சிவகுமார் (22) என்ற வாலிபர் அங்கு சென்றுள்ளார்.

வீட்டில் தனியாக இருந்த மாணவியின் வாயில் துணியை வைத்து அடைத்து, கைகளை கட்டி மறைவான இடத்திற்கு தூக்கி சென்று கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக கத்தியை காட்டி மிரட்டி இருக்கிறார்.

பின்னர் தொடர்ந்து மாணவியை மிரட்டி கற்பழித்து வந்துள்ளார். இது மாணவியின் சகோதரர்களுக்கு தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் மாணவி 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கோவிந்த சாமி, சப்–இன்ஸ்பெக்டர்கள் சிதம்பரம், முரளிதரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சிவகுமாரை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வள்ளியூர் அருகே கல்லூரி மாணவியை காரில் கடத்த முயற்சி!!
Next post 2–வது திருமணம் செய்து பெண்ணை ஏமாற்றிய ராணுவ வீரர் மீது வழக்கு!!