வள்ளியூர் அருகே கல்லூரி மாணவியை காரில் கடத்த முயற்சி!!

Read Time:2 Minute, 22 Second

fcd8fe75-5747-419d-9739-42665f507225_S_secvpfவள்ளியூர் அருகே உள்ள பழவூர் பகுதியை சேர்ந்தவர் இந்திரா (வயது19). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு கல்லூரியில் 3–ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

மாணவி இந்திராவை அதே பகுதியை சேர்ந்த தினேஷ் (25) என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆரம்பத்தில் பேசிப்பழகிய இந்திரா, வீட்டில் ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக தினேஷ்சுடன் பேசுவதையும் நிறுத்தி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் தினேஷ், மாணவி இந்திராவை வலுக்கட்டாயமாக கடத்தி சென்று திருமணம் செய்ய முடிவு செய்தார். நேற்று மாலை இந்திரா கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக ஆவரைக்குளம் பஸ் நிறுத்தத்துக்கு நடந்து சென்றார். அவருடன் அவரது தோழிகள் சிலரும் நடந்து சென்றனர்.

அப்போது ஒரு கார், இந்திரா அருகே வந்து நின்றது. காரில் இருந்து இறங்கிய தினேஷ்சும் அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து இந்திராவை கையை பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற முயன்றனர்.

ஆனால் இந்திரா, காரில் ஏற மறுத்து கூச்சல் போட்டார். அவருடன் நடந்து வந்த தோழிகளும் இந்திராவை பிடித்து காரில் ஏற்றிவிடாமல் கூச்சல் போட்டனர். இதனால் அவர்களை நோக்கி பொதுமக்கள் ஓடி வந்தனர். இதை பார்த்த தினேஷ் கடத்தல் முயற்சியை கைவிட்டு விட்டு காரில் ஏறி நண்பர்களுடன் தப்பி சென்றுவிட்டார்.

இதுகுறித்து இந்திரா பழவூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் தினேஷ், ராஜன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கமுதி அருகே இளம்பெண் அடித்துக்கொலை: 4 பெண்கள் உள்பட 8 பேருக்கு வலைவீச்சு!!
Next post சேத்துப்பட்டு அருகே 9–ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் கைது!!