காதலிக்குமாறு வற்புறுத்தல்: கல்லூரி மாணவியை தொந்தரவு செய்த வாலிபர் கைது!!

Read Time:1 Minute, 14 Second

45cf2824-92e2-4e6c-a5f6-20572164dad9_S_secvpfராமநாதபுரம் சுகில்ராஜ வீதியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் சூர்யா (வயது24). இவர் ராமநாதபுரம் அருகே முத்துப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. இறுதியாண்டு படித்து வருகிறார்.

சூர்யா, கல்லூரிக்கு செல்லும்போது ராமநாதபுரம் கொத்தர் தெருவை சேர்ந்த காளிதாசின் மகன் கவுதம் (24) பின்தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்தாராம். பல முறை மாணவி சூர்யா எச்சரித்தும் தொடர்ந்து வாலிபர் தொந்தரவு கொடுத்து வந்தார்.

இதுகுறித்து மாணவி சூர்யா தனது தாயார் பூபதியிடம் நடந்த விவரங்களை தெரிவித்தார். அவர் ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தொந்தரவு செய்த வாலிபர் கவுதமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருவாடானை பஸ் நிலையத்தில் பெண் தாசில்தாரை கிண்டல் செய்த அரசு ஊழியர் கைது!!
Next post வாணியம்பாடி அருகே கணவர் வீட்டு முன்பு 3வது நாளாக மனைவி தர்ணா!!