திருவாடானை பஸ் நிலையத்தில் பெண் தாசில்தாரை கிண்டல் செய்த அரசு ஊழியர் கைது!!
Read Time:1 Minute, 16 Second
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலகத்தில் சமூக நல பாதுகாப்பு திட்ட தாசில்தாராக இருப்பவர் லட்சுமி (வயது53).
இவர் நேற்று இரவு ஆர்.எஸ்.மங்கலம் சென்று விட்டு திருவாடானை பஸ் நிலையத்தில், தனது ஜீப்பின் வருகைக்காக காத்திருந்தார்.
அப்போது ஜீப்பும் வந்தது. திருவாடானை யூனியன் அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்க்கும் ராமநாதபுரம் அரண்மனை பகுதியை சேர்ந்த ராஜபாண்டி மகன் விஜயகுமார் (34) ஜீப்பின் முன்புறம் அமர்ந்து கொண்டு ரகளையில் ஈடுபட்டார்.
இதை தட்டிக்கேட்ட தாசில்தார் லட்சுமியை, தரக்குறைவாக கிண்டல் செய்து பேசி உள்ளார்.
இதுகுறித்து திருவாடானை போலீசில், தாசில்தார் லட்சுமி புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தார்.
Average Rating