மிஸ்டு கால் கொடுத்து பெண்களை மயக்கி கற்பழிக்கும் நெல்லையை சேர்ந்த காம கொடூரன் சிக்கினான்!!

Read Time:5 Minute, 2 Second

4e669f95-683c-4f99-9224-2b479c2d9ff9_S_secvpfசென்னை யானை கவுனியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் ஜெயஸ்ரீ.

இளம் பெண்ணான இவரது செல்போனுக்கு ஒரு மிஸ்டு கால் வந்தது. அந்த நம்பரில் தொடர்பு கொண்டு பேசிய போது எதிர்முனையில் ஒரு வாலிபர் பேசினார். முதல் நாள் செல்போனில் தொடர்ந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது.

செல்போன் காதலன் சொல்வதையெல்லாம் கேட்கும் மனநிலைக்கு ஜெயஸ்ரீ மாறினார்.

ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி வரும்படியும், தான் திருமணம் செய்து கொள்ளும்படியும் காதலன் வாக்குறுதி கொடுத்தான்.

அதை நம்பி வெளியேறிய ஜெயஸ்ரீயை ஊர் ஊராக அழைத்து சென்றார். சிதம்பரம், கடலூர் ஆகிய இடங்களில் லாட்ஜிகளில் தங்க வைத்து கற்பழித்தார்.

கடைசியில் கள்ளக்குறிச்சியில் ஒரு ஓட்டலில் தங்க வைத்து அதே போல கற்பழித்தார். மோகம் தீர்ந்ததும் அங்கிருந்து நழுவி விட்டார்.

காதலனை செல்போனில் தொடர்பு கொண்டு பலனில்லை. கள்ளக்குறிச்சியில் இருந்து மீண்ட ஜெயஸ்ரீ நடந்த விபரங்களை பெற்றோரிடம் கூறினார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது பற்றி ஏழுகிணறு போலீசில் புகார் செய்தனர்.

இதற்கிடையில் உடல் நிலை பாதித்த ஜெயஸ்ரீ பரிதாபமாக இறந்து போனார். ஜெயஸ்ரீயின் சாவுக்கு காரணமான குற்றவாளியை கண்டுபிடிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

கடந்த ஒரு மாதமாக ஜெயஸ்ரீயை சீரழித்தவன் யார்? அவன் எங்கே இருக்கிறான்? என்று எந்த துப்பும் தெரியாமல் போலீசார் தவித்தனர்.

இந்த நிலையில் நேற்று வால்டாக்ஸ் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த சப்–இன்ஸ்பெக்டர் மோகன்தாசை பார்த்ததும் ஒரு வாலிபர் திருட்டு முழிமுழித்தபடியே வேகமாக நடையை கட்டினார்.

அவரை மடக்கிய போலீசார் சோதனையிட்ட போது 2 செல்போன்களும், 5–க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளும் வைத்திருந்தது தெரிய வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.

அப்போது ஜெயஸ்ரீயை கற்பழித்ததும், அவரது சாவுக்கு காரணமானவரும் அவர்தான் என்பது தெரிய வந்தது. அந்த வாலிபரின் பெயர் சங்கர் என்ற சங்கர் கணேஷ் (28). நெல்லை மாவட்டம் சிதம்பராபுரத்தை சேர்ந்தவர்.

ஜெயஸ்ரீ இறந்த தகவலை பத்திரிகை மூலம் பார்த்த சங்கர் நிலைமை பார்த்து வர சென்னைக்கு வந்த போதுதான் போலீஸில் சிக்கி இருக்கிறான். அவனிடம் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

நெல்லை மாவட்டத்தில் சில வழக்குகளில் சிக்கி ஜெயிலுக்கு சென்று வந்துள்ளான்.

சங்கர் தனது செல்போனில் இருந்து மனம் போன போக்கில் ஏதாவது செல்போனுக்கு மிஸ்டு கால் கொடுப்பாராம். அந்த நம்பரில் இருந்து ஆண்கள் தொடர்பு கொண்டால் தவறான எண் என்று சொல்லி இணைப்பை துண்டித்து விடுவாராம்.

பெண்கள் தொடர்பு கொண்டால் அவர்களிடம் அன்பாக பேசி நட்பை வளர்த்து கொள்வாராம். பேச்சின் இடையே காதல் வார்த்தைகளையும், காம உணர்வுகளையும் அள்ளி வீசி அந்த பெண்களை வீழ்த்தி விடுவாராம். அவ்வாறு தனது வலையில் விழும் பெண்களை உல்லாசமாக அழைத்து சென்று கற்பழித்து விட்டு கழட்டி விட்டு விடுவாராம்.

நம்பரை அடையாளம் கண்டு பிடிக்காமல் இருக்க பல கார்டுகளை மாற்றி மாற்றி பயன்படுத்தி வந்துள்ளார். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிங்கம்புணரி அருகே காதல் ஜோடி தற்கொலை: காதலன் பலி!!
Next post ஐ சம்பளத்தில் பாதியை மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு அளித்த விக்ரம்!!