மீண்டும் தள்ளிப் போகும் என்னை அறிந்தால்?

Read Time:2 Minute, 12 Second

Untitled-126அஜித் இரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் ’என்னை அறிந்தால்’.

கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய், விவேக் உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருக்கிறார். இப்படம் பொங்கலுக்கே வெளியாக வேண்டியது. ஆனால் ஒரு சில காரணங்களால் படத்தின் வௌியீட்டை 29ம் திகதிக்கு தள்ளி வைத்தனர் படக்குழுவினர்.

இந்நிலையில் படம் மேலும் ஒரு வாரம் தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘என்னை அறிந்தால்’ படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கியிருக்கும் ஐங்கரன் நிறுவனம், ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் உலகமெங்கும் பெப்ரவரி 5-ம் திகதி வெளியாகும் என எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

படத்தின் சென்சார் பணிகள் தாமதமாவதால் வௌியீட்டுத் திகதி தள்ளிப்போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் படத்திற்கு நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்த போது படத்தின் இறுதிகட்ட பணிகள் இன்னும் முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

இருந்தாலும் ஒரு படம் வௌியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டு இருமுறை மாற்றப்படும் அளவிற்கா இறுதி கட்ட பணிகள் தாமதம் ஏற்படும் என சந்தேகங்களும் எழத்தான் செய்கின்றன.
ஆனால் இதுகுறித்து தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தரப்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோவையில் சாப்ட்வேர் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை!!
Next post ஆங்கில மீடியத்தில் பாடங்கள் புரியாததால் விரக்தி: கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை!!