செக்ஸ் புகார் கூறப்பட்ட தலைமை ஆசிரியர் மீண்டும் பணியில் சேர்ந்தார்: பொதுமக்கள் நல்லவர் என சிபாரிசு!!
பொள்ளாச்சி அருகேயுள்ளது ஜக்கார்பாளையம். இங்குள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அய்யாசாமி.
இவர் அந்த பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் வேலை பார்த்த ஆசிரியையிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக அந்த ஆசிரியை உதவி கல்வித்துறை அதிகாரியிடம் புகார் செய்தார். நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் அந்த ஆசிரியை மாவட்ட தொடக்க கல்வி அதிகாரியிடம் புகார் செய்தார். விசாரணைக்குப் பின்னர் தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவர் 15 நாட்களில் மீண்டும் அதே பள்ளியில் பணியில் சேர்ந்துள்ளார். இதுகுறித்து கல்வித்துறை உயர் அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘தலைமை ஆசிரியர் அய்யாசாமி வேலைபார்க்கும் ஊரைச்சேர்ந்த பொதுமக்கள், அவருடன் வேலை பார்க்கும் ஆசிரியைகள், ஆசிரியர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் பலர் அவர் மிகவும் நல்லவர், அவர் மீது கூறப்பட்டுள்ள புகார் தவறானது. எனவே அவரை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஊர் பொதுமக்கள் கேட்டுக்கொண்டதால் அவர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் துறை ரீதியான விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது’’ என்றார்.
Average Rating