ஓசூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலியை கடத்த வந்த காதலன் விஷம் குடித்தார்!!

Read Time:3 Minute, 54 Second

2116438c-216c-4285-afc4-eb103918bd0a_S_secvpfகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சூளகிரி அருகே உள்ள கொரல் தொட்டி கிராமத்தை சேர்ந்த பொன்னப்பா மகள் அனிதா (வயது 19).

இவருக்கும் வி.கொட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (25) என்ற வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களது திருமணம் இன்று காலை சூளிகிரி கீழ் தெருவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்துக்காக நேற்று மதியம் முதல் உறவினர்கள் மண்டபத்துக்கு வந்து விட்டனர். இரவு விருந்தும் மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது.

இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு வாலிபர் ஒருவர் அனிதாவுக்கு தாலி கட்ட முயன்றார். இதை பார்த்த மணப்பெண்ணின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து அந்த வாலிபரை பிடித்தனர். அப்போது அவருடன் வந்த 3 பேர் தப்பி ஓடினர். மேலும் ஒரு வாலிபர் சிக்கினார்.

மணப்பெண்ணுக்கு தாலி கட்ட முயன்று பிடிபட்ட வாலிபரிடம் மணப்பெண்ணின் உறவினர்கள் விசாரித்தனர். அந்த வாலிபரின் பெயர் மாதேஷ் (24) என்பதும், அவர் பாத்தகோட்டா அருகே உள்ள ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரும், அனிதாவும் ஒரு ரெடிமேடு நிறுவனத்தில் பணியாற்றிய போது காதலித்து வந்ததும் அனிதாவின் பெற்றோர் மகளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து இன்று காலை திருமணம் செய்து வைக்க முயன்றதும் தெரியவந்தது.

அனிதாவே தன்னை வந்து மீட்டு செல்லுமாறு காதலனுக்கு செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளார். இது குறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வருவதற்குள் அனிதாவின் காதலன் மாதேஷ் திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை போலீசார் மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தால் மனம் உடைந்த மணமகன் ரமேஷ் தனக்கு அனிதா வேண்டாம் என்று கூறி விட்டார். இதனால் அனிதாவை அவரது உறவினர்கள் அழைத்து சென்று விட்டனர். அதே மேடையில் ரமேசுக்கும் அவரது முறைப்பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. அனிதாவின் காதலன் உள்பட 5 பேர் நேற்று இரவே திருமண மண்டபத்துக்கு வந்து தங்கி அனிதாவை கடத்த முயன்று உள்ளனர். அந்த முயற்சி தோல்வி அடைந்ததால் அனிதாவுக்கு கட்டாய தாலி கட்ட முயற்சி செய்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

தற்போது அனிதா கவலையுடன் காத்து இருக்கிறார். அவருக்கு காதலனை விட்டு வேறு ஒரு மாப்பிள்ளையுடன் திருமணம் செய்ய அவரது பெற்றோர் முயற்சி செய்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆம்பூரில் புதுப்பெண் தற்கொலை: கல்லூரி மாணவியை மணந்தார் மணமகன்!!
Next post கண்ணை மறைத்த மதுபோதை: 2 வயது மகளை பலாத்காரம் செய்த தொழிலாளி!!