அடையாறில் கழுத்தை அறுத்து திருநங்கை தற்கொலை முயற்சி!!
Read Time:1 Minute, 21 Second
அடையாறு கெனால் சாலையை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (22) திருநங்கை. இவர் நேற்று இரவு கழுத்து அறுபட்ட நிலையில் சென்னை அரசு பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை வாலிபர் ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இது குறித்து அடையாறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ராஜேஸ்வரியிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தனக்கு தானே கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக் முயன்றதாக தெரிவித்தார்.
ராஜேஸ்வரி உண்மையிலேயே தற்கொலைக்கு முயன்றாரா அல்லது அந்த வாலிபருக்கும் ராஜேஸ்வரிக்கும் பிரச்சினை ஏற்பட்டு அவர் கழுத்தை அறுத்து விட்டு தப்பி விட்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ராஜேஸ்வரி வசித்த அறையில் தங்கி இருந்த அந்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Average Rating