சேலம் மாநகராட்சி புதிய கட்டிடத்தில் கான்கிரீட் விழுந்து தொழிலாளி பலி!!

Read Time:1 Minute, 36 Second

0a2290f1-66f6-4655-b9e4-b2d673fd3156_S_secvpfசேலம் கலெக்டர் அலுவலகம் அருகே அமைந்துள்ள சேலம் மாநகராட்சி மைய கட்டிடம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை கட்டுமான பணியின் போது திடீரென்று கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது. அப்போது அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன் பட்டியை சேர்ந்த ராமசாமி (வயது 27) என்பவர் மீது கான்கிரீட் விழுந்து அமுக்கியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாமாக இறந்தார்.

மற்றொரு தொழிலாளியான ரத்தினம் என்பவர் படுகாயம் அடைந்தார்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் போலீசாரும் தீயணைப்பு படையினரும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியான ராமசாமி உடல் மருத்துவ பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டது. காயம் அடைந்த ரத்தினத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் சேலத்தில் இன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 70 வயது முதியவர் கைது!!
Next post கோவையில் சாப்ட்வேர் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை!!