திட்டக்குடி அருகே மூதாட்டியை கற்பழித்து கொன்ற வழக்கில் வாலிபர் கைது!!
திட்டக்குடியை அடுத்த ஆவினங்குடியை சேர்ந்தவர் தங்கவேலு. இவரது மனைவி லட்சுமி (வயது 65). இவர் காணும் பொங்கலன்று மாலை அங்குள்ள விவசாய மின் மோட்டார் கொட்டகைக்கு குளிக்க சென்றார். ஆனால் அதன்பிறகு லட்சுமி வீடு திரும்பவில்லை. இரவு முழுவதும் பல இடங்களில் தேடியும் எங்கும் லட்சுமி இல்லை.
இந்த நிலையில் மறுநாள் காலை அங்குள்ள கரும்பு தோட்டத்தில் லட்சுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது ஆடைகள் அலங்கோலமாக கிடந்தது. அவர் அணிந்திருந்த 7 பவுன் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. லட்சுமியை யாரோ கற்பழித்து கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆவினங்குடி போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த அன்று அந்த வழியாக யார், யார் சென்றார்கள்? என்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொட்டாரம் கிராமத்தை சேர்ந்த பழனிவேலு (34) தனது நண்பருடன் அந்த பகுதியில் சுற்றித்திரிந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பழனிவேலுவை பிடித்து விசாரணை நடத்தினர். பழனிவேலுவின் நண்பர் லட்சுமியை கற்பழித்து கொலை செய்துவிட்டு நகையை கொள்ளையடித்ததாகவும் அதற்கு பழனிவேலு உடந்தையாக இருந்ததாகவும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பழனிவேலுவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள அவரது நண்பரை தேடி வருகிறார்கள்.
Average Rating