கோவையில் சாப்ட்வேர் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை!!

Read Time:1 Minute, 39 Second

a7c36878-0b0e-4129-9f32-bc190bee3c24_S_secvpfகோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் வினோத்(வயது 27). எம்.பி.ஏ. படித்துள்ள இவர் கோவை ஐ.டி.பார்க்கில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் திடீரென்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் செல்வபுரம் போலீசார் விரைந்து சென்று வினோத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வினோத் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்று விசாரித்தனர். அப்போது வினோத் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது.

அதில் இன்ஸ்பெக்டர் வணக்கம். எனக்கு வாழப்பிடிக்கவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனது பெற்றோர் மற்றும் நண்பர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்.

எனது உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் பெற்றோரிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும் வினோத் தற்கொலை செய்தது ஏன்? என்பதை அறிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேலம் மாநகராட்சி புதிய கட்டிடத்தில் கான்கிரீட் விழுந்து தொழிலாளி பலி!!
Next post மீண்டும் தள்ளிப் போகும் என்னை அறிந்தால்?