பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கைதான போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு?

Read Time:2 Minute, 54 Second

a6b0a5fe-680e-4d7c-bdef-5f19debbc1b0_S_secvpfசேலம் அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கைதான போலீஸ் ஏட்டு சஸ்பெண்டாகிறார். அவர் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

சேலத்தை அடுத்த தாசநாயக்கன்பட்டி பாலாஜி நகரை சேர்ந்தவர் சரவணன் (30). இவர் துணி ஏற்றுமதி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி கோகிலா (23). இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மணிகண்டன் (38). இவர் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த கோகிலாவிடம் மணிகண்டன் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது கோகிலா சத்தம் போட்டதால் மணிகண்டன் மற்றும் அவருடன் வந்த பாலாஜி, மாரியப்பன் ஆகியோரும் அங்கிருந்து சென்று விட்டதாக தெரிகிறது.

இதுப்பற்றி வீட்டிற்கு வந்த சரவணனிடம் அவரது மனைவி கோகிலா கூறினார். உடனே சரவணன் தனது தாயாருடன் மணிகண்டன் வீட்டிற்கு சென்று தட்டிக்கேட்டார். அப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து மணிகண்டன், பாலாஜி, மாரியப்பன் ஆகியோர் சரவணன் வீட்டிற்கு சென்று அவரது தந்தை சுப்பிரமணி என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து கோகிலா மல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீஸ் ஏட்டு மணிகண்டன், பாலாஜி, மாரியப்பன் ஆகிய 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக 7 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

இதே போல் போலீஸ்காரர் மணிகண்டன் மனைவி கோமதி செல்வி கொடுத்த புகாரின் பேரில் நாகராஜன், சரவணன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான சென்னம்மாள், கோகிலா ஆகியோரை தேடிவருகிறார்கள்.

வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீஸ் ஏட்டு மணிகண்டன் ஜெயிலில் அடைக்கப்பட்ட விபரங்கள் மாநகர போலீஸ் கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் அவர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியின் கள்ளக்காதல் உறவால், நடந்த விபரீதம்: மனைவியை கொன்று ஆற்றில் வீசிய தமிழன்! சுவிஸ் ஜெனிவாவில் சம்பவம்
Next post தொட்டால் தொடரும்!!